search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயில் கைதி மரணம்"

    புழல் ஜெயிலில் கைதி திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    அனகாபுத்தூர் தாய் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் விநாயகம் (42). கடந்த மாதம் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 1-வது பிளாக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த விநாயகம் இன்று காலை திடீரென்று மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது உடல் நிலை மோசமடைந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விநாயகத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

    ×